‘பசங்க’, ‘கோலிசோடா’ போன்ற படங்களில் சிருவன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிஷோர், ‘உறுதிகொள்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
ஏ.பி.கே. பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள்.
பாண்டி அருணாசலம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜூட் வினிகர் இசையமைக்க எம்.ஜேபி எடிட்டிங் செய்கிறார். மணிஅமுதன் பாடல்கள் எழுத, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். எஸ்.எஸ்.ஸ்ரீதர் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, பி.அய்யப்பன், சி.பழனி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
’நெடுஞ்சாலை’ படத்தில் இயக்குநர் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.அய்யனார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் குறித்து இயக்குநர் அய்யனார் கூறுகையில், ”பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது, சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல், பருவ மாற்றம் ஏற்படுகிற கால கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சி தானே தவிர அது காதல் இல்லை. காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது. அப்படிப்போனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது தான் படத்தின் கதை.
படம் பார்க்கின்ற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையை கற்றுக் கொள்வார்கள். இதை காதல் மோதல் செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி இருக்கிறோம்.
விரைவில் படம் வெளியாக உள்ளது.” என்றார்.
FLIPKART
Monday, 3 July 2017
’கோலிசோடா’ கிஷோர் நாயகனாக நடிக்கும் ‘உறுதி கொள்’
Subscribe to:
Post Comments (Atom)
இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்க பைக்...!
கடந்த சில ஆண்டுகளில், பல சர்வதேச மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய சந்தையிலும் கால் பதித்து வருகி...
No comments:
Post a Comment