FLIPKART

Monday, 3 July 2017

'மெர்சலுக்கு ரூ.30 கோடி! விஜய் டிவியை வென்ற ஜீடிவி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீடிவி ரூ.30 கோடி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய்-அட்லி கூட்டணியில் வெளியான 'தெறி' மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அதே கூட்டணியில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற விஜய் டிவியும் ஜீ டிவியும் கடுமையாக போட்டியை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் ரூ.30 கோடிக்கு ஜீடிவி உரிமையை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
சாட்டிலைட் உரிமையின் விலை இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருப்பது விஜய்யின் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் 'மெர்சல்' படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

No comments:

Post a Comment

இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்க பைக்...!

கடந்த சில ஆண்டுகளில், பல சர்வதேச மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய சந்தையிலும் கால் பதித்து வருகி...