சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த மணிமண்டபத்தின் 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை காட்டிராக்டருக்கு பொதுப்பணித்துறை வழங்கி உள்ளது.
நான்கு வாயில்களை கொண்ட இந்த மணிமண்டபத்தின் நடு நாயகமாக சிவாஜி சிலை வைக்கப்படுகிறது. சுமார் 2 ஆயிரத்து 124 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்படத்தில் சிவாஜி வாழ்க்கையை சொல்லும் புகைப்பட கண்காட்சி இடம்பெறுகிறது. திராவிட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிற்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
வருகிற ஜூலை 21-ம் தேதி சிவாஜி பிறந்த நாள். அன்று மணிமண்டபம் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. முதல்வர் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், திரையுலக பிரமுகர்கள், சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள்.
FLIPKART
Monday, 3 July 2017
ஜூலை 21-ல் சிவாஜி மணிமண்டபம் திறப்பு
Subscribe to:
Post Comments (Atom)
இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்க பைக்...!
கடந்த சில ஆண்டுகளில், பல சர்வதேச மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய சந்தையிலும் கால் பதித்து வருகி...
No comments:
Post a Comment