FLIPKART

Monday, 3 July 2017

திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி- இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு!

பெண்களுக்கான கல்வியே மறுக்கப்பட்டுவரும் நிலையில், திருநங்கைகளுக்கு மேற்படிப்பை இலவசமாக வழங்க இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில் திருநங்கைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பது எல்லோரும் அறிந்ததே. திருநங்கைகளுக்கு மற்ற ஆண் பெண் பாலர்களுக்குக் கிடைப்பதுபோல எந்த ஒரு வாய்ப்பும் சலுகையும் கிடைப்பதில்லை. முக்கியமாக அவர்களை யாரும் மதிப்பதுகூட இல்லை. இந்நிலையில் சில திருநங்கைகள் மட்டும் முன்னேற்றம் கண்டு வருவது ஆங்காங்கே அதிசயமாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் மற்றவர்களைப் போலவே திருநங்கைகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில், திருநங்கைகளுக்கு மேற்கல்வியை இலவசமாக வழங்க இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மேலும் திருநங்கைகளின் படிப்புக்கான அனைத்துக் கட்டணங்களிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்க பைக்...!

கடந்த சில ஆண்டுகளில், பல சர்வதேச மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய சந்தையிலும் கால் பதித்து வருகி...